13 November 2013

வார்த்தையின் வாசமே

உன் நிஜத்தின் பின்னால்
நிழல்
அழைந்ததைவிட,
உன் நினைவின் பின்னால்
நான்
அழைந்ததே அதிகமடி.....
*************
இறைவன் பெயர் வைத்த உறவுகள் -
ஜீவனை தொலைக்காதவரை தொடரும்....
இதயம் பெயர் வைத்த உறவுகள் -
அன்பை தொலைக்காதவரை தொடரும்....
***************
உன் உடலை
உரசும்வரை,
என் உடைகளுக்கு உயிர்பிறக்கவில்லை.... உன் கண்களை காணும்வரை,
என் கவிதைகளை காணவில்லை.....
உன் அன்பை அனுபவிக்கும்வரை,
என் மனது மணக்கவில்லை....
உன் மூச்சுவாசம் நுகராதவரை,
வாசங்கள்
என் நுரையீரல் நுழையவில்லை....
***************
மணலோவியம் மழை தொடும்வரை நிலைக்கும்....
மனதோவியம் மரணம் தொடும்வரை நீடிக்கும்....
************
விடியலின் வெளிச்சத்தில்
விழிமூட காத்திருக்கும் விண்மீன்கள் போலவும்,
பனியின்முகம் பார்த்து
கண்திறக்கும்  கதிரவன் போலவும்,
தினமும் பிறக்க ஆசைபடுகிறேன்,
மரணம் பிறக்கும் வரை....
**********
 கருமேகங்களை கலைத்திட காற்றின் கைகள் போதுமடி..
கண்ணீர் மேகங்களை கலைத்திட உன் வார்த்தையின் வாசமே போதுமடி...
*************
எந்தபெண்ணோட மூச்சுகாற்றையும் ஏற்பேன் சுவாசிப்பதற்காக...
உன்னை மட்டுமே என்னவளாக ஏற்பேன் நேசிப்பதற்காக.....
**************
 

 
 

No comments:

Post a Comment