13 November 2013

தினங்கள் தீக்குளிக்கும்

பகலில் பிறக்கும் நிலவு
பார்வையில் பிறக்கவில்லை...
இரவில் எரியும் விண்மீன்
பார்வையை
எரிக்கவில்லை...
பின்தொடரும் பிள்ளைநிலா
பார்வையில்
படரவரவில்லை...
****************
ஜன்னல்வழியாக பார்த்தால்தான் நீராடாதநிலா அழகு...
கண்வழியாக கண்டால்தான்
விழியில்ஆடும்நீ அழகு...
உன்னைதழுவி பிறந்தால்தான் காகிதகவிதை அழகு...
******************
கண்ணீர்
விழவைப்பவனை விட
கண்ணீர் நிற்கவைப்பவனை நிறுத்தாமல் நேசி.....
******************
வாக்களித்தபின் மறந்துபோவது
அரசியல்வாதி மட்டுமல்ல அரசியே நீயும்தான்டி...
***************
சித்திரமாக நீ
நின்றால் என்இதயமும் கற்சுவர்தானடி
பூவாக நீ உதிர்ந்து விழுந்தால் என்நெஞ்சமும்
பாறையாகுமடி
மழையாக நீ நனைக்க வந்தால் என்மனமும் மண்ணாகுமடி
அலையாக நீ அணைக்க நினைத்தால் என்உள்ளமும்
கரையாகஉறையுமடி....
***************
உன் அருகாமையில் உறையும் போது,
கிழமைகள் கிடந்து உருளும்
நாட்கள் நடந்து
செல்லும்
வாரங்கள் வளர்ந்து
நிற்கும்
வருடங்கள் வாழ
அடம்பிடிக்கும்....
உன் அருகாமை உருகும்போது,
தினங்கள் தீக்குளிக்கும்
வாரங்கள் சோகமாகும்
வருடங்கள் யுகமாகும்....
****************
கேட்காமல்
தீண்டுவதுதான்
காற்றும்,காதலும்
சொல்லிதராமல்
வருவதுதான்
அன்பும்,அக்கறையும்
படிக்காமல்
புரிவதுதான்
பாசமும்,நேசமும்....
****************
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment