13 November 2013

ஞாபககாற்று

காயங்கள் மோத,
கருவிழி உடைந்து கண்ணீர் ஓடும்....
மரணம் மோத,
மனம் உடைந்து
காதல் ஓடுமா?....
****************
என்றோவரும்
இறப்பை நினைத்தே இதயம் வாழ்ந்தால்,
இழக்கும் இன்பத்தை...
உனக்காக உண்டான நொடிகள்,
நோய்கண்டு
வாழமுடியாமல் வாடும்...
இன்பமாலையை இதயம் சூடநினைத்தால் மட்டுமே
மணக்கும் மனது....
பிறக்கும் புன்னகை...
இறக்கும் காயங்கள்...
கசக்கும் கண்ணீர்...
இனிக்கும் இன்பம்...
*****************
உன்னருகில்
உறையும் நேரத்தில்
உதடுகள் உறங்கிவிடுவது, இதயம் நினைப்பதை இமைகள் பேசிவிடும் என்பதாலோ...
*******************
நீரில் மிதக்கும் நிலவு உடையலாம்....
பெண்ணே!
உன்னில் மிதக்கும் நான் உடையலாமா?....
**************
உன்னை அழைக்கும் ஞாபககாற்று இதயம்தொட்டு
இறக்கும் நேரத்தில்,
உறங்கும்
உன்நினைவுகளுக்கு
உயிர்எழுப்பி,
தேடுவேன் உன்னை....
 
 
 
 
 

No comments:

Post a Comment