13 November 2013

தோல்வி இறந்தது

தடைகளை தாண்டாமல் பெறுவது
வெற்றியாகாது
சிறையை தாண்டாமல் பெறுவது தண்டனையாகாது
காயங்களை தாண்டாமல் பெறுவது
காதலாகாது....
*************
கண்ணங்களுக்கு புன்னகை சொல்லிதந்தாய்
கண்ணீர் இறந்தது...
வாழ்விற்கு நம்பிக்கை சொல்லிதந்தாய்
தோல்வி இறந்தது...
**************
கடல் அழகாவது அலையாலே
மரம் அழகாவது
மலராலே
கவிதை அழகாவது கற்பனையாலே
காதல் அழகாவது
கன்னியாலே
நட்பு அழகாவது
நண்பனாலே
காற்று அழகாவது மோதலலாலே
அருவி அழகாவது அசைவுகளாலே
அன்பு அழகாவது அம்மாவாலே
ஆகாயம் அழகாவது
இரவாலே
வாழ்க்கை அழகாவது
நம்பிக்கையாலே
உள்ளம் அழகாவது உண்மையாலே
மழலை அழகாவது
குறும்புகளாலே
என்அருகாமை அழகாவது
பெண்ணே உன்னாலே....
**************
சிரிக்கும் அலை சீற்றம்
கொள்ளாதவரை அழகு
நீச்சலாடும் உன்நினைவுகள் நிற்காதவரை அழகு.....
****************
விலக நினைப்பவரை விரும்ப நினைக்காதே
விரும்ப நினைப்பவரிடம் விலக நினைக்காதே....
**************
பனி ஈரங்களை
மலர் அறியும்
மேக ஈரங்களை
மண் அறியும்
கண்ணீர் ஈரங்களை
கண்ணம் அறியும்
கன்னியின்
நினைவு ஈரங்களை
இதயம் அறியும்
கடலின்
நாண ஈரங்களை
கரை அறியும்....
******************
கண்ணத்தில்
முத்தகவிதை எழுதினாள்
அருகாமையில் நாணகவிதை எழுதினாள்
இருவிழியால் கனவுகவிதை எழுதினாள்
கண்ணீரால்
துன்பகவிதை எழுதினாள்
புன்னகையால்
இசைகவிதை எழுதினாள் இதயத்தால்
காதல்கவிதை எழுதினாள்
அவளது அசைவுகளை எழுத மொழி
தேவையில்லை
ரசிக்க விழி மட்டும் போதும்......
********************
 
 
 
 
 

No comments:

Post a Comment