13 November 2013

வெளிச்ச விளக்குகள்

நழுவாத உன்
நினைவுகள்
வலிக்காத உன்
காயங்கள்
வாடாத உன்
வாசங்கள்
மறையாத உன்
நேசங்கள்
காணாத உன்
மாற்றங்கள்
இதழ்திறக்காத உன் பேச்சுகள்
பூக்காத உன்
புன்னகைகள்
அகலாத உன்
ஸ்பரிசங்கள்
இதெல்லாம் தேடி அலைந்து
தூங்காத நம்
இதயங்கள்.......
******
என் கவிதையின்
கற்பனை உயரம்
கன்னியே! உன்னை கண்டவுடன் கண்டறிந்தேன்...
********
குடைக்குள் மழை வரநினைப்பது போல
உனக்குள் நான் வரநினைக்கிறேன்...
********
உன்னிடம்
தொலைந்துபோன
என்னைவிட
என்னிடம்
படிந்துபோன
உன்னை
தேடிஅலைகிறேனடி...
********
கல் உறங்கினால்
பாறை
சொல் உறங்கினால் மௌனம்
இமை உறங்கினால் உறக்கம்
இதயம் உறங்கினால் மரணம்
புன்னகை உறங்கினால் துன்பம்
கண்ணீர் உறங்கினால் இன்பம்
கனவுகள் உறங்கினால் காலை
கதிரவன் உறங்கினால் மாலை
கர்வம் உறங்கினால்
வெற்றி
முயற்சிகள் உறங்கினால் தோல்வி
நிலவு உறங்கினால்
பகல்
ஆதவன் உறங்கினால் இரவு
******
உடலைவிட்டு உயிர்மூச்சு ஓடுவது உலகம் காணும் இறப்பு
என்னைவிட்டு உன்மூச்சு
ஓடுவது நான் காணும்
இறப்பு
********
இளம்இதயத்தை கவிதை எழுத உன் கண்பார்வை தூண்டியது... காதல்உலகம் கூட்டிசென்றது உன் இதயகால்கள்....
உன்னை உள்ளே வைத்து இதயகதவுகளை பூட்டிசென்றது உன் இதழ் திறந்தபுன்னகை....
என் இதயவானில் என்றும் மறையாத பெண்ணிலவும் நீதான்....
**********
அருகில் வசப்படாத எதுவும் தேவையில் அடங்கும்
தேவையில் வசப்படாத எதுவும் தேடலில் அடங்கும்
தேடலில் வசப்படாத எதுவும் இதயத்தில் அடங்கும்
**********
நிலா உறங்கும் பகல்வேளையில் பக்கத்தில் நின்று வெளிச்சவிளக்குகள் ஏற்றுகிறாய்
நிலவுக்கு பதில்.....
கதிரவன் உறங்கும் இரவுவேளையில்
கனவில் நின்று
எரிகிறாய் என்னுள்
கதிரவனுக்கு பதில்....
-----------------------
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment