13 November 2013

இதயம் இடிபாடுகளில் வாழ்வதால்தான்

தனக்குள் தவிப்புகள் இருந்தாலும் தட்டிஎழுப்பாமல் கட்டிவைக்கும் பெண்களின் மனகட்டுபாடுகளால் இதயம் இடிபாடுகளில் வாழ்கிறது அவளதுஇதயம் இடிபாடுகளில்
வாழ்வதால்தான் சுதந்திரமாக தெரிகிறது என்வாழ்நாட்கள்......
கடைசிவரை
அவளது கண்பார்வைகூட தவிப்புகளை
கசியவில்லை.........
*********
உன் நிழலும் நினைவும் என்னை துரத்தி வராதபோதுதான் தனிமையும் என்மீதுஇனிமை தூவுகிறது.........
**********
கற்பனைவீட்டிற்குள் கடத்திவந்தேன் அவளை பாதசுவடுகளை பதியாமல்கூட பறந்துவிட்டால் என்கற்பனைவீட்டைவிட்டு .....
*********
மொட்டுகள் இல்லாத செடியோடு காற்றுபேசி பயனில்லை அதைபோல
உன்அன்பு இல்லாத உள்ளத்தோடு நேசமாக உரையாடுவதும் பயனற்றது..........
********
வெளிவிடாமல் மூடிவைக்கப்படும் மலரின் வாசமும்,மனதின் நேசமும் மற்றவர்களால் நுகரமுடிவதில்லை........
**********
இறந்தபிறகும் மண்ணுள் புதைக்கபடாத உதிர்ந்தஇலைபோல்,
மறந்தபிறகும் உன்னுள் மறைந்துபோகாமல் வாழ்கிறேன் உதிராதநினைவுகளால்....
************
உன்விழிகள் அளித்த சிபாரிசின் பேரில்,
உன்இதயத்தை தேர்வுசெய்தேன்
காதலை
சேகரித்துவைத்து செலவிட.......
**********
கண்அயர்ந்து உறங்கும் கதிரவன் மறுபடியும் கண்திறக்கும்வரை,
இரவுக்கு பணிபுரிய வருகிறாள்
நிலவுதேவதை........
*********
மற்றவர்மீது நாம் அள்ளிதெளிக்கும் அன்பின் வாசத்தைவிட
நம்மீது மற்றவர் அள்ளிதெளிக்கும்
அன்பின் வாசம்
வசியபடுத்தும் நம்மை....
********
உனக்கு எதிரியாக
நீயே இருந்தால், வீழ்த்துவது கடினம்......
*********
சிலநொடிகளில் செத்துபோகும் உன்சினங்களால்,
உன்னோடு
உடன்பிறந்த உன்குணங்கள் சாகடிக்கபடுகிறது........
*********
உன்னை என்னுள் தேடிகொண்டே
தெரிந்ததால்,
என்னிடமே நான் தொலைந்துநிற்கிறேன்....
********
நம்மிடையே அன்பின் அடையாளம் தொலையாதவரை, பிரிவென்பதும்
நம் பின் தொடருமே
தவிர
நம்மிடையில் வருவதில்லை.....
***********
அவளது கருவிழிகளை
கட்டிதழுவும் எந்தன்
கவிதைஅலைகளின் போராட்டம் என்றும் முடிவுபெற விரும்பவில்லை........
------------------------
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment