13 November 2013

உயிர்கொல்லியானாவள்

இறப்புக்காக வாழ்பவன் மனிதனல்ல
மற்றவர்க்காக வாழ்பவனே மனிதன்.....
*********
கஷ்டம் கடந்து
செல்....
இஷ்டம் கடந்து செல்லாதே....
**********
பொருள்தராத வரிகள் கவிதை ஆவதில்லை
நீ இல்லாத கவிதைகள் பொருள்தருவதில்லை..
*********
தண்ணீரில்
வாழ்ந்தாலும் இறப்பதில்லை தாமரை
முட்களோடு
வாழ்ந்தாலும்
மடிவதில்லை மலர்
காயங்களோடு வாழ்ந்தாலும் கரைவதில்லை காதல்
சரிவுகளோடு
வாழ்ந்தாலும்
சாய்வதில்லை மலை
நிஜத்தோடு
வாழ்ந்தாலும்
நிற்பதில்லை நிழல்
இன்பங்களோடு வாழ்ந்தாலும் தூங்குவதில்லை துன்பம்
கஷ்டங்களோடு வாழ்ந்தாலும் கைவிடுவதில்லை கள்ளமில்லா நட்பு......
**********
பதிலுக்காக கேள்வி வாழலாம்
வெற்றிக்காக தோல்வி வாழலாம்
பார்வைக்காக கண்கள் வாழலாம்
பருவபெண்ணுக்காக காதல்
வாழலாம்
உனக்காக கவிதைகள் வாழலாம்
கவிதைக்காக நானும் வாழலாம்
அன்பிற்காக அனைவரும் வாழலாம்......
*********
பாஷைகள் தேவையில்லை பாசம்பேச
நேரங்கள்
தேவையில்லை நேசம்பேச
கரங்கள் தேவையில்லை கவிதைபேச
இனங்கள் தேவையில்லை
இன்பம்பேச
இதழ்கள் தேவையில்லை
இவையெல்லாம்பேச...
**********
வானவில் வண்ணங்களையும் தாண்டிவிட்டது என்னவளின்
எண்ணத்தின்
வண்ணம்......
*********
விழுந்தாலும் எழுந்துஓடும்
அருவியும்,
கடலைகண்டாலும் ஓயாதஅலையின் வேகமும்
போல
தோல்வியில் விழுந்தாலும்
எழுந்துஓடுபவன்
வெற்றியைகண்டாலும் ஓயக்கூடாது....
ஓயாதவன் செதுக்கபடுகிறான்
ஓய்வெடுப்பவன்
ஒதுக்கபடுகிறான்....
***************
உயிரினுள் உறைந்திருப்பவள் உருகும்நேரத்தில் உயிர்கொல்லியானாவள்.....
**************
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment